திருச்செந்தூர் சந்தையில் தீவிபத்து – போலீசார் விசாரணை

திருச்செந்தூரில் உள்ள சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சேதமடைந்தன.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகவத்சிங் பேருந்து நிலையம் அருகே காந்தி தினசரி சந்தை உள்ளது. இங்கு பலசரக்கு கடைகள், காய்கறி கடைகள், பழைய இரும்பு, பேப்பர் கடைகள் என நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன.

இந்தநிலையில், நேற்று இரவு பழைய பேப்பர், இரும்புக் கடையில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென பற்றிய தீ அருகில் இருந்த கடைகளுக்கும் பரவியது.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இரவு நேரம் என்பதால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version