திமுக என்ன செய்தது – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி

ஒன்றரை லட்சம் தமிழ் சொந்தங்களை இலங்கை கொன்று குவித்த போது, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த திமுக என்ன செய்தது என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை ஒட்டி கோவை மாவட்டத்தில் அதிமுக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் எஸ் பி வேலுமணி, கோவை உக்கடம் பகுதியில் இருந்து ஆத்துப்பாலம் வரை மேம்பால பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

முதல்வரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று கூறிய அவர், அத்திக்கடவு – அவினாசி திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.

 

Exit mobile version