தமிழகத்தில் நிகழும் வன்முறைக்கு திமுக தான் காரணம் – தமிழிசை குற்றச்சாட்டு

தமிழகத்தில் நிகழும் வன்முறைக்கு காரணம் திமுக தான் என்று மாநில பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் குற்றம்சாட்டி உள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டில் தமிழகத்திற்கு கிருஷ்ணா நதிநீர் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பிரியாணி கடை, பஜ்ஜி கடை, பியூட்டி பார்லர் போன்ற இடங்களில் நிகழ்ந்த சம்பவங்களை எடுத்துக்கொண்டால், தமிழகத்தில் நிகழும் வன்முறைகளுக்கு காரணம் திமுக தான் என்பது தெரிய வரும் என்று அவர் குற்றம்சாட்டினார்.

அரசியலில் தான் வளரவில்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் நினைத்தால், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினும் வளரவில்லை என்பதே உண்மை என பதிலடி கூறினார். காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது திமுக, தமிழகத்திற்கு என்ன திட்டங்களை கொண்டு வந்தது என்றும் தமிழிசை கேள்வி எழுப்பினார்.

Exit mobile version