தமிழகத்தில் அரிசி விலை வீழ்ச்சி

கர்நாடகா, கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு கூடுதலாக பெய்துள்ளது. கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் அதிக மழை பெய்ததால், அரிசி உற்பத்தி அதிகரித்து உள்ளது. கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திலும் நெல் விளைச்சல் அதிகரித்து உள்ளது. இருப்பினும் கர்நாடகா, கேரளாவில் இருந்து அரிசி வரத்து அதிகரித்து இருப்பதால், தமிழகத்தில் அரிசி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. 25 கிலோ மூட்டை அரிசி 100 ரூபாய் வரை குறைந்துள்ளது. இந்த விலை மேலும் சரிய வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version