தகாத உறவுகளால் அதிகரித்து வரும் கொலைகள்

சென்னை திருமங்கலத்தை அடுத்த கலைவாணர் காலனி காந்தி தெருவை சேர்ந்த ரங்கநாதன் என்பவர் நேற்று முன் தினம் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். இச்சம்பவம் தொடர்பாக ஜெ ஜெ நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். ரங்கநாதன் பிரேத பரிசோதனை அறிக்கையில் தலையின் பின் பக்கம் பலத்த காயம் இருந்தது. இதையடுத்து குடும்பத்தினரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ரங்கநாதனை அவரது தம்பி பாரதிராஜா அடித்துக் கொன்றது தெரியவந்தது. பாரதி ராஜாவிற்கும் அவரது அண்ணனின் மனைவிக்கும் இடையே இருந்த தகாத உறவே கொலைக்கு காரணம் என தெரியவந்துள்ளது. சென்னையில் தகாத உறவின் காரணமாக கொலைகள் அதிகரித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version