சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றேன் – நடிகை ரேவதி பரபரப்பு பேட்டி

“5 வருடங்களுக்கு முன்பு சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றேன்”, என்று நடிகை ரேவதி கூறியுள்ளார்.

பாரதிராஜா இயக்கத்தில் ‘மண்வாசனை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகமான ரேவதி. தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

ரேவதி இயக்குநர் சுரேஷ் மேனனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து, விவாகரத்து செய்து கொண்டனர். பின்னர் ரேவதி கணவரை விட்டு பிரிந்து கேரளாவில் குடியேறினார்.

இந்தநிலையில் ரேவதி சோதனை குழாய் மூலம் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். 5 வருடங்களுக்கு பிறகு இப்போது இந்த தகவலை அவர் வெளியிட்டு இருக்கிறார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரேவதி, வாழ்க்கையில் பல பிரச்சினைகளை கடந்து வந்துள்ள தான், தாய்மை பேறை அடைய ஏங்கியிருப்பதாகக் குறிப்பிட்டார்.

எனவே சோதனை குழாய் மூலம் கர்ப்பம் அடைந்து பெண் குழந்தையை பெற்றெடுத்ததாகவும் அந்த குழந்தைக்கு மகி என்று பெயர் சூட்டியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அவளை நான் தத்தெடுக்கவில்லை. தத்தெடுத்து வளர்ப்பதாக வதந்தி பரவியிருக்கிறது. எனவே தான் உண்மையை வெளியிட்டு இருக்கிறேன் எனக் குறிப்பிட்ட ரேவதி தற்போது தன் குழந்தை மகிக்கு 5 வயது ஆகியிருப்பதாகத் தெரிவித்தார்.

Exit mobile version