செல்போனை பிடுங்குவதா? – 3 குழந்தைகளை கொன்று விட்டு தற்கொலை செய்த பெண்

 

சேலம் அருகே கணவர் செல்போனை பிடுங்கியதால் 3 குழந்தைகளை கொன்று பெண் ஒருவர் உயிரை மாய்த்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

சேலம் மாவட்டம் நாழிக்கல்பட்டி மன்னார்காடு கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமணன் . கல் உடைக்கும் தொழிலாளியான இவருக்கு ஜெயா என்ற மனைவியும் 7 வயதான சுமித்ராஸ்ரீ , 3 வயதான ஷாலினி , 1 வயதான வெற்றிவேல் ஆகிய குழந்தைகளும் இருந்தன.
இந்தநிலையில் கொழிஞ்சம்பட்டி மெயின்ரோட்டில் உள்ள ஒரு கிணற்றில் ஜெயா மற்றும் அவரது 3 குழந்தைகளும் பிணமாக கிடந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது பரபரப்பு தகவல்கள் வெளியானது.
கடந்த சில மாதங்களாக ஜெயா செல்போனில் அடிக்கடி யாரோ ஒருவரிடம் பேசி வந்தார். இதனை கணவர் லெட்சுமணன் கண்டித்துள்ளார்.ஆனாலும் ஜெயா ,பேசுவதை தொடர்ந்ததால் , லெட்சுமணன் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஜெயாவிடம் இருந்த செல்போனை பிடுங்கி மறைத்து வைத்துள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த ஜெயா அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சென்று செல்போன் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் ஏற்கனவே லெட்சுமணன் செல்போனை பிடுங்கி வைத்ததை அறிந்து கொடுக்க மறுத்தனர்.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஜெயா, குழந்தைகளுடன் தற்கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது.

ஜெயாவுக்கு முகத்தில் தாக்கிய வெள்ளை நோய் சமீப காலமாக அவரது உடல் முழுவதும் பரவியதாகவும், இதனால் மனம் உடைந்து, 3 குழந்தைகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்ததாக ஜெயாவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version