சென்னையில் மின்சாரப் பேருந்துகள் – லண்டனில் ஆய்வைத் தொடங்கினார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

சென்னை மாநகர பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைக்காக விரைவில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. லண்டனில் இயங்கி வரும் C-40 என்கிற நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி, சென்னையில் மின்சார பேருந்துத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இது குறித்த ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடைபெற்றது.

இந்த நிலையில் லண்டனில் மின்சாரத்தால் இயங்கும் பேருந்துகளையும், பேருந்து பணிமனைகளையும் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர்,போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டேவிதார் ஆகியோர் பார்வையிட்டனர்.

லண்டன் போக்குவரத்து அமைப்பின் தலைவர், டாம் குன்னிங்டனை சந்தித்து பேருந்துகளை இயக்குதல், நிர்வகித்தல், செயல்படுத்துவதில்
உள்ள நுணுக்கங்கள் குறித்து அவர்கள் கேட்டறிந்தனர்.

சென்னையில் மின்சார பேருந்துகள் இயங்கிட, இந்தப் பயணம் பெரிதும் பயன் தரும் என்று C-40 நிறுவனத்திடம் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Exit mobile version