கொந்தளிக்கும் பொன்னார்,காரணம் என்ன?

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில், பிரதமரைக் கொல்ல மாவோயிஸ்டுகளுடன் திட்டம் தீட்டப்பட்டிருந்தாக குறிப்பிட்டுள்ளார். அதனடிப்படையிலேயே, அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். இதனால் ராகுல் காந்தி உட்பட எந்த அரசியல் கட்சி தலைவர்களும் அவசரப்பட்டு பயங்கரவாதிகளுக்கு துணை போவதை நிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் அப்போதைய பிரதமர் ராஜூவ் காந்தி கொல்லப்பட்டார் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். அதுபோன்று பாஜக ஆட்சி காலத்தில் நடப்பதற்கு அனுமதிக்க முடியாது என பொன். ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.

Exit mobile version