கொடைக்கானலில் சீசன் பிரமாதம்

 

கொடைக்கானலில் அக்டோபர் மாத சீசன் தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆப் சீசன் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் குடும்பத்துடன் அதிகளவில் கொடைக்கானலுக்கு வரத்தொடங்கியுள்ளனர்.
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக மேகமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அவ்வப்போது மழையும் பெய்கிறது. வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் அருவி, பியர் சோழ அருவி , வட்டகானல் அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகளிலும் நீரோடைகளிலும் மழையின் காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளது.
அருவிகளின் ரம்மியமான தோற்றம் சுற்றுலாப்பயணிகளின் கவனத்தை வெகுவாய் கவர்ந்து வருகிறது.

Exit mobile version