காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டம் சோபூர் வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது, பாதுகாப்பு படையினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில், தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், அந்த பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனரா என்று, தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. காரணமாக அப்பகுதியில் தொடர் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்பதாக கிராமவாசிகள் தெரிவித்தனர். துப்பாக்கிச் சண்டையையடுத்து அப்பகுதியில் இணையதள சேவை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version