காதலன் பற்றி நிலானி வெளியிட்ட பரபரப்புத் தகவல்கள்!

காவல்துறை சீருடையில் காவலர்களை சரமாரியாக விமர்சித்து கைதாகி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை நிலானி. இந்நிலையில் சென்னை கேகே நகரில் அவரது காதலர் காந்தி லலித் குமார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதால், மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கினார்.

இந்நிலையில் வடபழனியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நிலானி கூறியதாவது, நான் லலித்தை காதலித்தது உண்மை தான். ஆனால் ஒரு முறை நான் அவரது மொபைல் போனை எடுத்து பார்த்த போது, அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது.

இதனால் அவரை திருமணம் செய்ய விரும்பவில்லை. இதனால் அவர் என்னை மனரீதியாக கடும் சித்ரவதைகளுக்கு ஆளாக்கி வந்தார். இதுகுறித்து நான் ஏற்கனவே வட பழனி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்.

லலித் ஒரு சைக்கோவை போல் நடந்து கொண்டார். எனது இரண்டு பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, நான் அவரை திருமணம் செய்ய விரும்பவில்லை. இதனால் எனது பிள்ளைகளையும் கொலை செய்யப்போவதாக மிரட்டினார்.

லலித், நல்லவன் அல்ல, அவனை திருமணம் செய்ய வேண்டாம் என அவரது குடும்பத்தினரே எனக்கு அறிவுரை கூறினர். எங்களுக்குள் உடல்ரீதியான எந்த உறவும் இல்லை.

லலித் ஆண்மையற்றவராக இருந்தார். சமூகத்தில் தனக்கு ஒரு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக என்னை திருமணம் செய்ய விரும்பினார்.

கடந்த 2 நாட்களாகவே கையில் பெட்ரோல் கேனுடன் சுற்றித் திரிந்த லலித் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டி வந்தார்.

இந்நிலையில் நான் சூட்டிங்கில் இருந்தபோது, எனக்கு கால் வந்தது. அதில் லலித் தீக்குளித்ததாக கூறினர். அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சென்று கதறி அழுதேன். இவ்வாறு நிலானி தெரிவித்தார்.

Exit mobile version