கள்ளத்தொடர்பு குற்றமில்லையா? – கொந்தளித்த வாணியம்பாடிக்காரர் தீக்குளிக்க முயற்சி

கள்ளத்தொடர்பு குற்றமில்லையா? என்று வாணியம்பாடியை சேர்ந்த ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருமணமான ஆணும் பெண்ணும் வேறு ஒரு நபருடன் சம்மதத்துடன் உறவு வைத்துக்கொண்டால், ஆண்களை மட்டும் தண்டிக்கும் பிரிவான 497 ஐ ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு தரப்பினர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் வாணியம்பாடி பஸ் நிலையத்தில் ஜனதாபுரம் பகுதியை சேர்ந்த ரவி என்பவர் நின்று கொண்டிருந்தார். திடீரென அவர் ,தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு கூச்சலிட்டார்.

அப்போது கள்ளத்தொடர்பு வைத்துக்கொள்வது கிரிமினல் குற்றம் அல்ல என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பாக சில வாசகங்களை கூறியதோடு, இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சத்தமாக கூறி விட்டு தீவைக்க முயன்றார்.

அப்போது அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை சுற்றிவளைத்து பிடித்து தீக்குளிக்க முயன்றதை தடுத்தனர். பின்னர் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version