கலை அறிவியல் படிப்புகளுக்கும் ஒற்றை சாளர கலந்தாய்வு – அமைச்சர் கே.பி.அன்பழகன்

சென்னை நுங்கம்பாக்கம் எத்திராஜ் பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

மாணவர்களின் முன்னேற்றமே நாட்டின் வளர்ச்சி என அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.பி அன்பழகன், கலை அறிவியல் படிப்புகளுக்கும், ஒற்றைச்சாளர முறையிலான கலந்தாய்வு கொண்டுவரப் பரிசீலிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

திருநங்கைகளுக்கு இடஒதிக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Exit mobile version