கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை – அமைச்சர் கருப்பணன்

பவானியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த விழாவில் பங்கேற்ற கருப்பணன், கர்ப்பிணி பெண்களுக்கு வளையல், புடவை, கர்ப்பகால கையேடு உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

இதேபோன்று, அம்மாபேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட அமைச்சர் கருப்பணன், 130 பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்தினார். கர்ப்ப காலத்தில் பெண்கள் எத்தகைய உணவை உட்கொள்ள வேண்டும், எவ்வாறு உடல்நிலையைப் பேண வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

Exit mobile version