எச்.ராஜா மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்! 

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் காவல்துறை, நீதித்துறையை இழிவாக பேசியதாக கூறி பா.ஜ.க. தேசியச் செயலாளர் எச்.ராஜாவிற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

காவல்துறை மற்றும் நீதிமன்றங்களில் பல தரப்பினரும் புகார் மனுக்களை அளித்துள்ளனர். புதுக்கோட்டை திருமயம் காவல்நிலையத்தில் எச்.ராஜா மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் குறித்து தரக்குறைவாக விமர்சித்ததாக கூறி, எச். ராஜாவிற்கு எதிராக அறநிலையத்துறை ஊழியர்கள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் எச்.ராஜா மீது புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை பெண் ஊழியர்கள் அளித்துள்ள புகாரில், தங்களை பற்றி தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்த எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். 

 

Exit mobile version