உச்சத்தில் பெட்ரோல் விலை! – வாகன ஓட்டிகள் திண்டாட்டம்

வரலாறு காணாத அளவில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை, இன்றும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

பெட்ரோலிய பொருட்களின் விலை தினந்தேறும் மாற்றி அமைக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை, இன்றும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 14 காசுகள் அதிகரித்து 84 ரூபாய் 19 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 12 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 77 ரூபாய் 25 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Exit mobile version