இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கி சூடு- 6 பாலஸ்தீனியர்கள் பலி

 

இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாலஸ்தீனத்தில் கடந்த மே மாதம் முதல் காஸாவில் தங்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை திரும்பத் தரக்கோரி பாலஸ்தீன மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அதே இடத்தில் இஸ்ரேல் யூதக் குடியிருப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் பாலஸ்தீன மக்களின் போராட்டத்தைத் தடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவத்தினர் துப்பாக்கி
மற்றும் பீரங்கியால் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரே நாளில் 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 210 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Exit mobile version