"இரும்புத்திரை" மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்

விஷால் நடித்த இரும்புத்திரை படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பி.எஸ்.மித்ரன். தற்போது தனது அடுத்த படத்திற்கான பணிகளை அவர் தொடங்கி உள்ளார். இந்தநிலையில், மித்ரனின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரவிக்குமார் மற்றும் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வருகிறார். இந்த இரு படங்களை முடித்த பிறகு மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்க இருக்கிறது. 

சிவகார்த்திகேயனின் 15வது படமாக உருவாகும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version