இந்திய பெண்கள் அந்த விசயத்தை வெளியே சொல்வதில்லை- நடிகை பிரீடா பிண்டோ

 

இந்திய பெண்கள் பாலியல் தொல்லைகளை வெளியே சொல்வதில்லை என நடிகை பிரீடா பிண்டோ தெரிவித்துள்ளார்.

ஆஸ்கார் விருது பெற்ற `ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் நடித்திருப்பவர் நடிகை பிரீடா பின்டோ . தற்போது ‘லவ் சோனியா’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரொமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரிடம் பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் முன்வைத்தனர். அப்போது ,இந்திய பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாவது குறித்தும் அவர் பேசினார்.

இங்கே பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் அடையாளத்தை மறைத்துக்கொள்ள விரும்புகிறார்கள் என்று அவர் தெரிவித்தார். தங்கள் குரல் ஊடகத்தில் சரியாக வெளிப்படும் என்றால்தான் வாய்திறக்க முன்வருகிறார்கள் என்றார். தங்கள் மீது ஏதாவது முத்திரை குத்தப்பட்டு விடுமோ என்று பெண்கள் அஞ்சுவதாக அவர் குறிப்பிட்டார். இங்கு பொது தளத்தில் ஆதரவு கிடைப்பதில்லை என்பதால்தான் பெண்கள் பேசத் தயங்கும் நிலை உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். அதே நேரம் பெண்கள் மீது அவதூறு பரப்புவது வளர்ந்த மேற்கத்திய நாடுகளிலும் உள்ளது என்று நடிகை ப்ரீடா பிண்டோ தெரிவித்துள்ளார்.

Exit mobile version