ஆசியாவிலேயே முதன்முறையாக கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற முதல் பெண் மீனாட்சி

ஆசியாவிலேயே முதன்முறையாக கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற முதல் பெண் மீனாட்சி ஆசியாவிலேயே முதன்முறையாக கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது. தற்போதைய வாழ்கை முறையில் குழந்தையின்மை பிரச்னை அதிகப்படியான மக்களுக்கு உள்ளது.

இந்த நிலையில், குஜராத் மாநிலத்தை சேர்ந்த மீனாட்சி என்ற இளம் பெண் திருமணமாகி அதிக வருடங்களாகக் குழந்தை இல்லாமல் தவித்து வந்துள்ளார். இவருக்கு மூன்று முறை கருச்சிதைவும், மேலும் ஒரு முறை குழந்தை இறந்தும் பிறந்துள்ளது. இனிமேல் மீனாட்சிக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து, மீனாட்சியின் தாய் அவருக்குக் கருப்பையைத் தானமாக வழங்கியுள்ளார்.
கடந்த வருடம் மீனாட்சிக்கு கருப்பை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. மீனாட்சி உடல்நிலை சற்று தேறிய பிறகு இந்த வருடம் ஏப்ரல் மாதம் இவருக்கு கருத்தரிப்பு சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று புனேவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மீனாட்சிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் மீனாட்சியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Exit mobile version