அறுசுவை அரசர் நடராஜன் காலமானார்

சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் அறுசுவை அரசர் நடராஜன். 55 ஆண்டுகளாக சமையல் கலையில் முடிசூடா மன்னனாக விளங்கிய இவர், அறுசுவை மசாலா என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார்.

ஜி.கே.மூப்பனார், அம்பானி. சுப்ரமணியன் சாமி போன்ற பிரபலங்களின் வீடுகளில் சிறப்பாக சமையல் செய்ததற்காக இவருக்கு அறுசுவை அரசர் என்ற பட்டம் கிடைத்தது. சமையல் கலையின் பக்குவம் குறித்த பல புத்தகங்களை நடராஜன் எழுதியுள்ளார்.

இந்தநிலையில் ஒருவார காலமாக சளித் தொல்லையால் மூச்சு விட சிரமப்பட்டு வந்த அவர் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version