அரிசி விலை வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சி

இந்தியாவின் தென் மாநிலங்களான கர்நாடகா, கேரளாவில் இந்த ஆண்டு அதிக அளவில் தென்மேற்கு பருவமழை பெய்துள்ளது. இதில் கேரளாவில் சில இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இந்த ஆண்டு அரிசி உற்பத்தி அதிகரித்து இருக்கிறது.

மேலும் தென்மேற்கு பருவமழையால் கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, தமிழகத்துக்கு தேவையான தண்ணீர் வந்தடைந்தது. இதனால் தமிழகத்திலும் நெல் அறுவடை அதிகரித்தது. கர்நாடக, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் அரிசி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் அரிசி விலை வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

அதன் அடிப்படையில் தமிழகத்தில் விற்கப்படும் 25 கிலோ மூட்டை அரிசி விலை 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை குறைந்துள்ளது. ஆந்திரா ஸ்டீம்,கர்நாடக ஸ்டீம் உள்ளிட்ட அரிசி விலைகளும் வெகுவாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version