அரவிந்த்சாமிக்கு ,சம்பள பாக்கியை கொடுக்க மனோபாலா ஒப்புதல்

நடிகர் அரவிந்த்சாமிக்கு சம்பள பாக்கியை கொடுக்க இயக்குனர் மனோபாலா ஒப்புக்கொண்டுள்ளார்.

அரவிந்தசாமி-திரிஷா ஜோடியாக நடித்துள்ள சதுரங்க வேட்டை-2 படத்தை மனோபாலா தயாரித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது.

இந்த நிலையில் நடிகர் அரவிந்தசாமி சென்னை உயர்நீதி மன்றத்தில், மனோபாலா மீது வழக்கு தொடர்ந்தார். சதுரங்க வேட்டை-2 படத்தில் நடித்ததில் தனக்கு ரூ.1.79 கோடி சம்பள பாக்கி உள்ளது என்றும், அதனை வட்டியுடன் திருப்பித்தர உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு மீண்டும் நீதிபதி எம்.சுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனோபாலா பதில் மனுதாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ‘‘சதுரங்க வேட்டை-2 படத்தின் சம்பள பாக்கி பிரச்சினையை அரவிந்தசாமியுடன் சமரசமாக பேசி தீர்த்துக் கொள்ள தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். முதல் தவணையாக அரவிந்தசாமிக்கு அக்டோபர் 10 ம் தேதிக்குள் 25 லட்சத்தை கொடுக்கவும் சம்மதித்துள்ளார். சதுரங்க வேட்டை-2 படத்தை நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவிக்காமல் திரைக்கு கொண்டு வர மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இரு தரப்பினரும் அக்டோபர் 12 ம் தேதி உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் பேசி தீர்த்துக் கொள்ள நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version