அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் அழைப்பு

அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளிடமிருந்தும் ஆலோசனைகளை பெற தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதற்காக வரும் 27ஆம் தேதி டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு, 7 தேசிய கட்சிகள், 51 மாநில கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர வேண்டும் என்று ஏற்கனவே 17 எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. இதனால், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை பற்றியும், தேர்தல் விளம்பரங்கள், தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிப்பது, அவதூறான பேச்சுகள் தவிர்ப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Exit mobile version