அதிமுக உயர்மட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் – ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது

 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அவசர உயர்மட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், மூத்த அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, மற்றும் கழகத்தின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, வைத்தியலிங்கம் எம்.பி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைத்தியலிங்கம் எம்.பி., எம்.ஜி.ஆர், நூற்றாண்டு விழா நடத்துவது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். குட்கா வழக்கு மீதான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அதுகுறித்து பேசுவதற்கு ஒன்றுமில்லை எனத் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து இன்று மாலை மீண்டும் உயர்மட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறம் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

Exit mobile version