அதிமுக , இந்தியாவின் 2 வது பெரிய கட்சியாக உருவெடுக்கும் – வைகைச்செல்வன் நம்பிக்கை

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு இந்தியாவின் இரண்டாவது பெரிய கட்சியாக அதிமுக இருக்கும் என கொள்கை பரப்பு செயலாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், பவானியில் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும், கழக செய்தி தொடர்பாளருமான வைகைச்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்று அதிமுகவின் தலைமையே முடிவு செய்யும் என்றார். கடந்த சட்டமன்றத் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியால் அதிமுக, இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக உள்ளது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுப்போம் என்று வைகைச்செல்வன் நம்பிக்கை தெரிவித்தார்.
  

Exit mobile version