அதிமுகவில் இருக்கும் வரை சாணம் கூட சாமியாக மாறும் – அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரை அடுத்த திருப்பரங்குன்றத்தில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

மாநில எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தொண்டர்களை அரவணைத்துச் செல்லும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறவுள்ளதாக கூறினார்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று கூறிய அவர், அதிமுகவில் இருக்கும் வரை சாணி கூட சாமியாக மாறும், விலகினால் சாமி கூட சாணமாக மாறும் என்று கூறினார்.

கட்சியில் இருந்து பல பேர் பிரிந்து சென்றாலும், தொண்டர்களுக்கு அவ்வை சண்முகம் சாலை புனித தலம் என்றும் போயஸ் கார்டன், ராமாவரம் ஆகியவை கோயில்கள் என்றும்  தெரிவித்தார்.

 

Exit mobile version