அண்ணா பிறந்தநாளையொட்டி சிறந்த காவல்துறை, தீயணைப்புத்துறை வீரர்களுக்கு அண்ணா பதக்கம்

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி பணியில் சிறந்து விளங்கும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, இந்த ஆண்டு 128 பேருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

காவல்துறையில் 100 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்படவுள்ளது. தீயணைப்பு துறையில் 10 பேரும், சிறைத்துறையில் 10 பேரும் அண்ணா பதக்கம் பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 5 பேருக்கும், விரல் ரேகை பிரிவைச் சேர்ந்த 2 அதிகாரிகளுக்கும், தடய அறிவியல் துறையில் ஒரு அதிகாரிக்கும் அண்ணா பதக்கம் வழங்கப்பட உள்ளது.

Exit mobile version