அக். 2 -ம்தேதி முதல் உண்ணாவிரத போராட்டம் -அன்னா ஹசாரே

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், லோக்பால் அமைப்பிற்கு உரிய அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். விவசாயிகளுக்கு மாதம் தோறும் 5 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள அன்னா ஹசாரே, விவசாயத்துறையில் எம்.எஸ். சுவாமிநாதன் அறிக்கையை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இவற்றை வலியுறுத்தி, மராட்டிய மாநிலம் அகமது நகரில், காந்தியடிகளின் பிறந்த தினமான அக்டோபர் 2 ஆம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.

Exit mobile version