ஃபிராங்கோவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு – கோட்டயம் நீதிமன்றம்

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறைமாவட்ட பேராயர் ஃபிராங்கோ மூலக்கல் மீது பாலியல் புகார் அளித்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வு போலீஸார், ஃபிராங்கோவிடம் தொடர்ந்து 3 நாட்கள் விசாரணை நடத்திய பின்னர், 21 ஆம் தேதி இரவு அவரை கைது செய்தனர்.

இதையடுத்து பேராயர் பொறுப்பிலிருந்து அவர் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஃபிராங்கோவை, 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு போலீசார் மனுத்தாக்கல் செய்தனர்.

நீதிமன்றம் 2 நாள் போலீஸ் காவல் அளித்து உத்தரவிட்டது. போலீஸ் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், ஃபிராங்கோவின் நீதிமன்ற காவலை அக்டோபர் 6 ஆம் தேதி வரை நீட்டித்து கோட்டயம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Exit mobile version