வைரமுத்து மீது பாடகி சின்மயி வீண்பழி சுமத்துவதாக சுவிட்சர்லாந்தில் வசிக்கும் இலங்கைத் தமிழர் சுரேஷ் கூறியுள்ளார்.

பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி வீண்பழி சுமத்துவதாக சுவிட்சர்லாந்தில் வசிக்கும் இலங்கைத் தமிழர் சுரேஷ் என்பவர் கூறியுள்ளார். 2004-ம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஈழ விடுதலை சுனாமி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது பாடலாசிரியர் வைரமுத்துவை தனியாக சந்திக்கும்படி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வற்புறுத்தியதாக பாடகி சின்மயி குற்றஞ்சாட்டி இருந்தார். இதுதொடர்பாக சுவிட்சர்லாந்தில் வசிக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சுரேஷ் என்பவர் வாட்ஸ் அப்பில் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாடகி சின்மயி கூறுவது தவறு என்றும், பாடலாசிரியர் வைரமுத்து குற்றமற்றவர் என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version