விஜய் அரசியலுக்கு வந்தால் அ.தி.மு.க. துளியும் கவலைப்படாது – மாஃபா பாண்டியராஜன்

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து திமுக உள்ளிட்ட கட்சிகள் வேண்டுமானால் கவலை படலாம் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன், அதிமுகவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு தலைமைகள் இருப்பதாகத் தெரிவித்தார்.

இதனால், நடிகர் விஜய் கூறியது போல், அதிமுகவில் எந்த வெற்றிடமும் இல்லை என்றும் குறிப்பிட்டார். மேலும், விஜயின் அரசியல் பிரவேசத்தால் திமுக உள்ளிட்ட கட்சிகள் வேண்டுமானால் கவலைப்படலாம் என்றும், அ.தி.மு.க. துளியும் கவலைப்படவில்லை என்றும் கூறினார்.

அத்துடன், சிலை கடத்தல் வழக்கில் அயல்நாட்டுத் தொடர்புகள் நிறைய இருப்பதால் தான், அந்த வழக்கைத் தமிழக அரசு, சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரியதாகவும், அதில் உள்நோக்கம் கற்பிக்க ஒன்றும் இல்லை என்றும் அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம் அளித்தார்.

Exit mobile version