வாக்களித்ததை உறுதி செய்யும் விவிபாட் எந்திரம்

மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக நாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபாட் எந்திரங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடலூர் மாவட்டத்தின் 9 தொகுதிகளுக்கு 3 ஆயிரத்து 100 விவிபாட் எந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளன. விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திரா, அதிமுக, திமுக, தேமுதிக, உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் அவை விருத்தாசலம் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

Exit mobile version