வட்டி கட்டாததால், 2 மாத குழந்தை சிறைபிடிப்பு – காவல்துறை அதிரடி

திருவண்ணாமலையில் கந்து வட்டி கேட்டு இரண்டு மாத குழந்தை மற்றும் பாட்டியை சிறை வைத்த மணி என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை கோபுரம் 4 வது தெருவைச் சேர்ந்தவர் பாரதி.

இவர் அதே தெருவைச் சேர்ந்த மணி என்பவரிடம் 15,000 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

இந்தநிலையில், பாரதி வாங்கிய கடன் தொகையுடன் வட்டியை சேர்த்து 70 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என்று கூறி மணி, பாரதியின் பாட்டி குப்பு மற்றும் பாரதியின் இரண்டு மாத கைக்குழந்தையும் வீட்டில் சிறை வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பாரதி, நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் மணியின் மீது கந்துவட்டி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர்.

Exit mobile version