வடகிழக்கில் இருந்து முதல் தலைமை நீதிபதி!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.

தீபக் மிஸ்ராவின் பதவி காலம் நிறைவடைவதையொட்டி, புதிய நீதிபதியாக பதவி மூப்பின் அடிப்படையில் ரஞ்சன் கோகாய் பெயரை அவர் பரிந்துரை செய்தார்.

இதனையொட்டி இன்று ரஞ்சன் கோகாய் புதிய தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டார்.

அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

வடகிழக்கு மாநிலமான அசாமை சேர்ந்தவர் ரஞ்சன் கோகாய்.

வட கிழக்கு மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தலைமை நீதிபதியாக பதவி ஏற்பது சுதந்திர இந்தியாவில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version