ரெட் அலார்ட் எதிரொலி – முதலமைச்சர் முக்கிய ஆலோசனை

அக்டோபர் 7 ஆம் தேதி தமிழகத்தில் அதீத கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனினும் மேற்குத் தொடர்ச்சி மழையை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் மட்டுமே கனமழை இருக்கும் என்றும் தமிழகம் முழுவதும் பரவலான கனமழைக்கு வாய்ப்பில்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மற்றும் அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

Exit mobile version