ரெட் அலர்ட்டை எதிர்கொள்ள சுகாதாரத் துறை தயார் – அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

இந்தியாவில் முதல்முறையாக, அரசு மருத்துவமனையில் கதிர் இயக்கவியல் துறையில் அணுக்கூறு புற்றுநோய் உயர் சிகிச்சை பிரிவை சென்னையில் உள்ள மருத்துவகல்வி இயக்ககத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முக்கிய புற்றுநோய்கள் இந்த பிரிவு மூலம் கதிர் வீச்சை செலுத்தி குணப்படுத்த முடியும் என்று தெரிவித்தார். மருத்துவ காப்பீட்டின் மூலமும் இங்கு சிகிச்சை பெறலாம் என அவர் கூறினார்.

மழை எச்சரிக்கை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் ரெட் அலர்ட்டை எதிர்கொள்ளும் வகையில் சுகாதாரத்துறை தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

Exit mobile version