ரூ. 39 லட்சம் மோசடி புகார் – பென்ஸ் கிளப் உரிமையாளர் கைது!

சென்னை பென்ஸ் கிளப் உரிமையாளரை பண மோசடிப் புகாரில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ஆனந்த் என்பவர், சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். பென்ஸ் கிளப் உரிமையாளர் சரவணன், தன்னிடம் 39 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றதாகவும் அதைத் திருப்பித் தராமல் மிரட்டி வருவதாக தெரிவித்திருந்தார்.

ஏற்கெனவே பென்ஸ் கிளப் சரவணன் மீது 4 பேர் மோசடிப் புகார்களை அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் போலீசார் அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் அவரை கைது செய்த போலீசார், சைதாப்பேட்டை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்திய பிறகு சிறையில்அடைத்தனர்.

Exit mobile version