ராமர்கோவில் ஊரணி தூர்வாரும் பணியை துவங்கி வைத்தார் செல்லூர் ராஜு

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இரண்டு ஏக்கர் பரப்பளவு கொண்ட பழங்காநத்தம் ராமர் கோவில் ஊரணி இரண்டு லட்சம் ரூபாய் செலவில் தூர்வாரப்படுவதாக கூறினார். மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள கண்மாய்கள் தூர்வாரப்பட்டு உள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து மக்களுக்கு பயனளிக்கிறது என அவர் குறிப்பிட்டார். சுதந்திரம் பெற்றதில் இருந்து தெருவிளக்கு இல்லாமல் இருந்த பசுமலை அண்ணாநகர் பகுதியில், தற்போது மாநகராட்சியின் முயற்சியால் 23 தெருவிளக்கு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

Exit mobile version