யாத்திரையின் போது ராகுல் அசைவம் சாப்பிட்டரா?

அமர்நாத் யாத்திரையின் போது ராகுல் காந்தி, அசைவ உணவை சாப்பிட்டதாக வெளியான புகைப்படத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.

கைலாஷ் யாத்திரை சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேபாளத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் அசைவ உணவை சாப்பிட்டதாக வெளியான புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதில் ராகுல் சிக்கன் சூப், சிக்கன் கிரேவியை ருசித்து சாப்பிடுவது போன்று தெரிகிறது. ராகுலின் இந்தச் செயலுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

புனித யாத்திரை என்ற பெயரில் அசைவ உணவை சாப்பிடும் ராகுல் காந்தி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலை நடக்கவுள்ளதை மனதில் வைத்து அமர்நாத் யாத்திரை மேற்கொண்டதாக விமர்சித்துள்ளது.

Exit mobile version