ம.பி. சட்டப்பேரவைத் தேர்தல் – பிரச்சாரத்தை இன்று தொடங்குகிறார் ராகுல்காந்தி

மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தொடங்குகிறார்.

இந்த ஆண்டு இறுதியில் மத்திய பிரதேசத்தில்,சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. பாஜக- காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி நிலவி வருவதால், பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

பாஜகவின் கோட்டையாக இருக்கும் மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. இதனிடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்குகிறார்.

அவருக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் வழி நெடுகிலும் தோரணங்கள் மற்றும் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணிக்காக ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் வரும் 25ம் தேதி பிரதமர் மோடி பிரச்சாரத்தை தொடங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version