News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

மின்மிகை மாநிலமாக திகழ்கிறது தமிழகம் – அமைச்சர் தங்கமணி

Web Team by Web Team
September 19, 2018
in TopNews, இந்தியா, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
மின்மிகை மாநிலமாக திகழ்கிறது தமிழகம் – அமைச்சர் தங்கமணி
Share on FacebookShare on Twitter

தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் மின்தட்டுப்பாடு வராத அளவிற்கு அதிமுக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி டெல்லியில் தெரிவித்தார்.

தமிழகத்தில் மின்சார உற்பத்தி செய்ய ஏதுவாக தினமும் 72ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி டெல்லி சென்றுள்ளார். மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி, தேவையான மின்சாரத்தை விட அதிகப்படியான மின்சாரத்தை உற்பத்தி செய்து தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்வதாகக் குறிப்பிட்டார்.

RelatedPosts

அண்ணா திமுக அமைப்பு பொறுப்புகளுக்கான முதற்கட்ட தேர்தல்

அண்ணா திமுக அமைப்பு பொறுப்புகளுக்கான முதற்கட்ட தேர்தல்

December 13, 2021
முன்கள பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உதவிய எம்எல்ஏ தங்கமணி

முன்கள பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உதவிய எம்எல்ஏ தங்கமணி

June 5, 2021

ஆனால் தமிழகத்தில் மின்வெட்டு என எதிர்கட்சிகள் பொய்யான வதந்தியை பரப்பி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் மின்வெட்டு வராது என்றும் , மின்மிகை மாநிலம் என்பதை மத்திய அரசு தமது சமன்பாட்டு அறிக்கையில் தெரிவித்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார் .

தமிழகத்திற்கு 3 அல்லது 4 நாட்களில் மத்திய அரசிடமிருந்து நிலக்கரி வரத்தொடங்கி விடும் என்றும் அதன்பின் நிலக்கரி கையிருப்பு அதிகமாகிவிடும் எனத் தெரிவித்தார்.

30 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது என்றும் இது குறித்து விரைவில் ஒப்பந்தம் போட உள்ளதாகவும் அவர் கூறினார்.

உடனடியாக தூத்துக்குடிக்கு 6 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து மத்திய மின்சாரத்துறை இணையமைச்சர் ஆர்.கே. சிங்கை சந்தித்த தங்கமணி, தமிழக்கத்திற்கு மத்திய தொகுப்பில் இருந்து 6ஆயிரத்து 152 மெகாவாட் மின்சாரத்தை முழுமையாக தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

Tags: piyush goyaltamilnadu electrocitythangamani
Previous Post

தமிழக அரசு வேண்டுகோள் – அரசு மருத்துவர்களின் போராட்டம் ஒத்திவைப்பு

Next Post

தேர்தலை தனித்து நின்று சந்திக்க தயாரா? – திமுகவுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு சவால்

Next Post
தேர்தலை தனித்து நின்று சந்திக்க தயாரா? –  திமுகவுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு சவால்

தேர்தலை தனித்து நின்று சந்திக்க தயாரா? - திமுகவுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு சவால்

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist