மின்சாரம் தாக்கி மாணவர் பலி

பூந்தமல்லி அடுத்த ஏரிக்கரையை சேர்ந்தவர் மாரி. இவரது மகன் திவாகர் தனியார் பாலி டெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

தனது வீட்டில் உள்ள வாஷிங் மெஷினுக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணியில் திவாகர் ஈடுபட்டுள்ளார்.

அப்போது மின் இணைப்பு இருப்பது தெரியாமல், வயரை தனது பல்லால் கடித்த திவாகர் மின்சாரம் தாக்கி, தூக்கி விசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கே.எம்.சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Exit mobile version