மத உணர்வுகளை எதிர்த்து போராடுவது அரசின் நோக்கம் இல்லை"

 

சபரிமலை விவகாரத்தில் போராட்டங்கள் நடத்தப்படுவதற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள அரசு அமல்படுத்தும் என்று உறுதியளித்தார். சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது கேரள அரசின் நிலைப்பாட்டிற்கு எதிரானது என்று கருத்து தெரிவித்த பினராயி விஜயன், தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருப்பதாக குறிப்பிட்டார். மத உணர்வுகளை எதிர்த்து போராடுவது அரசின் நோக்கம் இல்லை என்று விளக்கம் அளித்த அவர், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

Exit mobile version