மதுரை மத்திய சிறையில் திடீர் சோதனை

மதுரை மத்திய சிறையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

சில புகார்களைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. காவல்துறை அதிகாரிகள், சிறைத்துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் ஆய்வு நடத்துகின்றனர். கோவை, சேலம், பாளையங்கோட்டை மத்திய சிறைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

அப்போது தடை செய்யப்பட்ட சில பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக மதுரை சிறையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சிறைத்துறை அதிகாரிகள் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

Exit mobile version