மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை

 

தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய மாவடங்களில் மழைபெய்து வருகிறது. நெல்லை மாவட்டம் மாஞ்சோலை பகுதியில் பெய்த பலத்த மழை காரனமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் அகஸ்தியர் அருவியிலும் அதிக தண்ணீர் கொட்டுவதால் இரண்டு அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளர். குற்றாலம் செல்லும் சுற்றுலாப் பயணிகள் மணிமுத்தாறு செல்வது வழக்கம் என்பதால், குளிக்க தடை விதிக்கப்பட்டு இருப்பது அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி உள்ளது

Exit mobile version