மகளுடன் வாழ விரும்புகிறேன் -நளினி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதுகுறித்து தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு எழுத்துப் பூர்வாமாக பதில் அளித்துள்ள நளினி, 28 ஆண்டுகளாக அனுபவித்த வலியை மறக்க விருப்புவதாக குறிப்பிட்டுள்ளார். தாங்கள் விடுதலை செய்யப்படுவது உறுதி என்று நம்பிக்கை தெரிவித்துள்ள அவர், மாநில அரசின் உரிமை பாதுகாக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். சிறையில் இருந்து விடுதலை ஆனதும் மகளுடன் வசிக்க விரும்புவதாகவும் நளினி தெரிவித்துள்ளார்

Exit mobile version