போலியோ மருந்தில் வைரஸ் கிருமிகள் கலப்பு- தயாரிப்பு நிறுவனத்துக்கு சீல்

 

குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட போலியோ மருந்தில் வைரஸ் தாக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட போலியோ சொட்டு மருந்தில் மிக மோசமான வைரஸ் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத்தில் இயங்கி வரும் மருந்து தயாரிப்பு நிறுவனத்தை மூடி சுகாதாரத் துறை அமைச்சகம் சீல் வைத்துள்ளது. மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் சில மாதங்களுக்கு முன்பு குழந்தைகள் பலியானதற்கும், இந்த போலியோ மருந்துக்கும் தொடர்பிருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Exit mobile version