போதை புகையிலை பறிமுதல்

பெங்களூரில் இருந்து காஞ்சிபுரம் வந்த அரசு பேருந்தில் கடத்தி வரப்பட்ட போதை புகையிலையை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்கப்படுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தநிலையில், பெங்களூருவில் இருந்து காஞ்சிபுரம் வந்த பேருந்தில் போதை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து, பூக்கடை சத்திரம் அருகே பெங்களூருவில் இருந்து வந்த அரசு பேருந்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் எனப்படும் போதை புகையிலை பாக்கெட்டுகள் பேருந்தில் கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. இவற்றை பறிமுதல் காவல்துறையினர் பேருந்தில் போதை புகையிலை கடத்தி வந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Exit mobile version